முல்லைத்தீவிலிருந்து சென்ற பேருந்தும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து ; ஒருவர் உயிரிழப்பு

0
202

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே இச் சம்பவம் நிகந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்புள்ளைக்கு அருகில் நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் டிப்பர் வாகன சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோர்

முல்லைத்தீவிலிருந்து சென்ற பேருந்துக்கு இடம் பெற்ற கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு | Mullaitivu Bus Accident

விபத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி உட்பட 10 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பேருந்தில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த பேருந்து கிளிநொச்சி டிப்போக்குச் சொந்தமானது என்று தெரியவந்துள்ளது.  

முல்லைத்தீவிலிருந்து சென்ற பேருந்துக்கு இடம் பெற்ற கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு | Mullaitivu Bus Accident
முல்லைத்தீவிலிருந்து சென்ற பேருந்துக்கு இடம் பெற்ற கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு | Mullaitivu Bus Accident