பெண் அதிகாரியை சராமரியாக தாக்கிய கும்பல் ; (பதற வைக்கும் வீடியோ) வைரல்!

0
381

பாட்னாவில் சுரங்கத் துறையைச் சேர்ந்த பெண் அதிகாரியை சராமரியாக தாக்கிய கும்பலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பெண் அதிகாரியை சராமரியாக தாக்கிய கும்பல்

பாட்னா மாவட்டத்தில் உள்ள பிஹ்தா நகரில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்களால் சுரங்கத் துறையைச் சேர்ந்த பெண் அதிகாரியை இழுத்துச் சென்று சராமரியாக தாக்கியுள்ளனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டனர். இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 44 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.