வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்த ஜேர்மானியருக்கு அடித்த அதிர்ஷ்டம்; கிடைத்த புதையல்

0
335

ஜேர்மன் நகரம் ஒன்றில், கையில் தங்கக்கட்டிகளுடன் பொலிஸ் நிலையத்துக்கு வந்த நபரை ஆச்சரியத்துடன் பார்த்தார்கள் பொலிசார்.

இளைஞருக்கு கிடைத்த புதையல்

ஜேர்மன் நகரமான Heidelbergஇல் வாழும் 29 வயது நபர் ஒருவர், தன் வீட்டில் கிடந்த பழைய பொருட்களை அப்புறப்படுத்தி, வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்திருக்கிறார்.

அப்போது, அவருக்கு சில தங்கக்கட்டிகளும், தங்க நாணயங்களும் கிடைத்துள்ளன.

தான் கண்டுபிடித்த தங்கக்கட்டிகள் மற்றும் நாணயங்களை எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையம் சென்றுள்ளார் அவர்.

அதாவது, ஜேர்மனியைப் பொருத்தவரை, இதுபோல புதையல் ஏதாவது கிடைக்குமானால், அதை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவேண்டும்.  

ஆறு மாதங்களுக்குள் அந்த புதையலின் சொந்தக்காரர் கிடைக்காவிட்டால், யார் புதையலைக் கண்டெடுத்தார்களோ, அவர்களுக்கே அது சொந்தமாகிவிடும்.

அப்படி, அதன் உரிமையாளர் கிடைத்துவிட்டாலும், அதில் ஒரு பங்கு அதைக் கண்டுபிடித்தவருக்குக் கொடுக்கப்படும்.  

அதிர்ஷ்டம்தான்

அந்த நபருக்குக் கிடைத்துள்ள புதையலின் மதிப்பு 118,633 பவுண்டுகள் ஆகும். அதன் உரிமையாளர் கிடைத்தால், புதையலைக் கண்டெடுத்தவருக்கு 3,518 பவுண்டுகள் கிடைக்கும்.

இல்லையென்றால், மொத்த புதையலையும் அதைக் கண்டுபிடித்தவரே வைத்துக்கொள்ளலாம்.

ஆக, பொலிசார் அந்த புதையலின் சொந்தக்காரரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.