புகழ் நடிகையான ஐஸ்வர்யா ராய் மது போதையில் பார்ட்டியில் முத்தம் கொடுத்த அலப்பறை செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ஐஸ்வர்யா ராய். உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
1997 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து மணிரத்தனம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானாவர் ஐஸ்வர்யா ராய்.
அவரின் முதல் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில் பின்னர் ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான் என அனைத்து நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.
காதல் முறிவு – திருமணம்
பின்னர் முன்னணி நடிகையாக மாறியதை அடுத்து சில காதல் விவகாரங்களில் சிக்கினார். குறிப்பாக திரையுலகில் அறிமுகமான 2, 3 வருடங்களிலேயே பிரபல நடிகர் சல்மான் கானுடன் டேட்டிங் செய்தார்.
இவர்களின் உறவு திருமணம் வரை சென்ற நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2001 ஆம் ஆண்டு பிரிந்தனர். பின்னர் குரு படத்தில் அபிஷேக் பச்சனுடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.
இதையடுத்து இருவரும் கடந்த 2007 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் மிக பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதிகளுக்கு 11 வயதில் ஆராத்யா என்கிற மகள் ஒருவரும் உள்ளார். திருமணம் ஆகி குழந்தை பிறந்த பின்னரும் கதாநாயகியாகவே நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் மிகவும் தரமான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு தமிழில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் சில நாட்களில் (ஏப்ரல் 28) ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது.
கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த ஐஸ்வர்யா
இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் போதை தலைக்கேறிய நிலையில் நிற்க கூட நிதானமின்றி கட்டி பிடித்து முத்தம் கொடுத்து குத்தாட்டம் போட்ட பழைய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது.
இதை பார்த்த நெட்டிசன்கள் ஐஸ்வர்யா ராயா இப்படி? என அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ ஈஷா அம்பானியின் சங்கீத் நிகழ்ச்சி பார்ட்டியின் போது எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.