காலையில் சண்டைப்பேச்சு; இரவில் ஜனாதிபதியிடம் பதவியை பாதுகாத்து தருமாறு கூறி, அழும் சஜித் …

0
149

காலையில் ஜனாதிபதிக்கு எதிராக சண்டைப் பேச்சுக்களை நடத்தும் சஜித், இரவில் ஜனாதிபதியை இரகசியமாக அழைத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பாதுகாக்குமாறு கூறி அழுவதாக தெரிவிக்கப்படுள்ளது.

இதனை ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

காலையில் சண்டைப்பேச்சு; இரவில் ஜனாதிபதிக்கு ரகசிய அழைப்பு! | Argumentmorning Secret Call President At Night

 சஜித் பிரேமதாசவின்  நம்பிக்கை 

இந்த வருடமும் இரண்டு முறை எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தக்கவைத்துக்கொண்டு, யாலக்குச் சென்று யானைகளைப் பார்த்து ஓய்வெடுப்பதே சஜித் பிரேமதாசவின் இப்போதைய நம்பிக்கை என்றும் ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி பற்றி அறிந்த அனைவரும் சஜித்துடன் இருந்தாலும் அவர்களின் இதயத்தில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவே இருப்பதாகவும் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.