மால்டாவை அண்மித்த சர்வதேச கடற்பரப்பில் மூழ்கக்கூடிய ஆபத்தான நிலையிலிருந்த படகிலிருந்து இலங்கையர்கள் உள்ளடங்களாக 440 பேரை பாதுகாப்பான முறையில் மீட்டிருப்பதாக எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை சேர்ந்த பிரஜைகளை (புலம்பெயர்ந்த) ஏற்றிச் சென்ற படகு, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அதிக சுமை காரணமாக மால்டாவை அண்மித்த சர்வதேச கடற்பரப்பில் மூழ்கும் நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்துள்ளது.
அனையடுத்து கடந்த புதன்கிழமை (05) அங்கு விரைந்து சென்ற எல்லைகளற்ற மருதக்துவர்கள் அமைப்பின் மீட்புப்பணியாளர்கள் சுமார் 11 மணிநேரப் போராட்டத்தின் பின்னர் இலங்கையர்கள் உள்ளடங்கலாக அப்படகில் இருந்த 440 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.