அதிபர் புடின் தொடர்பில் லண்டனில் கூடிய நீதி அமைச்சர்கள்!

0
187

ரஷ்யா மீதான போர்குற்றங்கள் குறித்த விசாரணைகளுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் விவாதிக்க நீதியமைச்சர்கள் ஒன்றுக் கூடியுள்ளனர்.

இதன்படி உலகம் முழுவதும் உள்ள நீதி அமைச்சர்கள் இன்று பிற்பகல் லண்டனில் ஒன்றுக்கூடியுள்ளனர்.

இது குறித்து நீதித்துறை செயலர் டொமினிக் ராப் கூறுகையில் நீதி கிடைக்கும் வரை நீதிமன்றத்திற்கு நிதி மற்றும் நிபுணத்துவத்தை அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் எனத் தெரிவித்தார்.

மேலும் இந்த அநியாயமான தூண்டுதலற்ற மற்றும் சட்டவிரோதமான படையெடுப்பின்போது உக்ரைனில் நடந்த அட்டூழியங்களுக்கு போர்குற்றவாளிகளை பொற்றுப்பேற்க வேண்டும் என்ற காரணத்திற்காக ஒன்றுக்கூடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.