கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிரபல கப்பல்!

0
246

கொழும்பு துறைமுகத்திற்கு இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS சுகன்யா’ என்ற நல்லெண்ண கப்பல் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது.

குறித்த கப்பல் நேற்றுறைய தினம் (27-02-2023) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை சம்பிரதாயங்களுக்கு அமைவாக வரவேற்றனர். மேலும் 101 மீற்றர் நீளமுள்ள இந்த கப்பலில் 106 பணியாளர்கள் உள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிரபல நாட்டு கப்பல்! | Indian Ship Ins Sukanya Arrived At Colombo Port

இதற்கிடையில் கப்பலின் கட்டளை அதிகாரி கொமாண்டர் பிரணவ் ஆனந்த் இன்று காலை மேற்கு கடற்படை கட்டளை பிரிவின் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவை சந்தித்தார்.

இலங்கை வந்துள்ள இந்திய கடற்படையினர், இலங்கை கடற்படையினருடன் இணைந்து பயிற்சிகளிலும் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தமது உத்தியோகப்பூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ‘INS சுகன்யா’ நாளை நாட்டிலிருந்து வெளியேறவுள்ளது.