இலங்கைக்கு விஜயம் கொண்டுள்ள பா.ஜ.க. தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் பிரபல தமிழ் தொலதிபரான கந்தையா பாஸ்கரன் அவர்களை சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு நேற்றைய தினம் யாழ்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. பா.ஜ.க. தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் அழைப்பின் பெயரில் அந்தச் சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகின்றது.
தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும்
இதன்போது தமிழ் மக்கள் எதிர்கொண்டுவருகின்ற பல்வேறு அரசியல், பொருளாதாரப் பிரச்சனைகள் சம்பந்தமாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது.
குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் என்பதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிக அக்கறை கொண்டுள்ளதாக அண்ணாமலை இதன்போது தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாச்சார மையத்தின் அங்குரார்பண வைபவத்தில் கலந்துகொள்வதற்காக இந்தியாவின் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை மற்றும் மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் L. முருகன் மற்றும் பா.ஜ.க. தமிழ்நாடு மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.