இலங்கையின் நேற்றைய தினம் இடம்பெற்ற 75ஆவது சுதந்திர தின நிகழ்வின் முன்னிட்டு யாழ் சிவில் சமூக நிலையத்தின் ஏற்பாட்டில் வாகனப் பேரணி நேற்று (04-02-2023) காலை ஆரம்பமானது.
இந்த பேரணியானது யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு அங்கியிருந்து கே.கே.எஸ் வீதியூடாக வைத்தியசாலை வீதியை அடைந்து மணிக்கூட்டு கோபுர வீதியூடாக சென்று விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது.
இதில் இளைஞர்கள் முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள்களில் சாகசத்தை நிகழ்த்தி மக்களுக்கு ஆபத்தான முறையில் செயற்பட்டனர். இதனால் அச்சமடைந்த மக்கள் வீதியில் பீதியில் பயணம் செய்ததை அவதானிக்க முடிந்தது.