புத்தாண்டுக்கு ஆடைகளை வாங்கச் சென்ற தாயும் மகளும் விபத்தில் உயிரிழப்பு!

0
365

ஓட்டோவும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தக் கோர விபத்து நீர்கொழும்பில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. புத்தாண்டுக்கு ஆடைகளை வாங்க மோட்டார் சைக்கிளில் கடைக்குச் சென்ற தாயும் மகளுமே விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது நீர்கொழும்பைச் சேர்ந்த 45 வயதுடைய தாயும், 17 வயதுடைய மகளுமே சாவடைந்துள்ளனர்.

அதேவேளை, ஓட்டோ சாரதியும், அதில் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புத்தாண்டுக்கு ஆடைகளை வாங்கச் சென்ற தாயும் மகளுக்கும் நேர்ந்த சோகம்! | Tragedy Mother Daughter Clothes For The New Year

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.