தந்தையின் இறுதி சடங்கிற்கு வந்த மகன் விபத்தில் பலி!

0
323

கெக்கிராவ, பொத்தனேகம பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ முகாமில் கடமையாற்றும் பிரதான பயிற்றுவிப்பாளர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பொலிஸ் நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

உயிரிழந்தவர் கெக்கிராவ பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் பிரதம பயிற்றுவிப்பாளர் டி.எம்.டி.செனவிரத்ன என்ற நபர் எனவும், அவர் கெக்கிராவ இரத்மல்கந்த பிரதேசத்தில் நிரந்தர வதிவிடம் கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இறந்தவரின் தந்தை சில நாட்களுக்கு முன்னர் மரணமடைந்த நிலையில் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக அவர் விடுமுறை எடுத்திருந்தார்.

தந்தையின் இறுதிக் கிரியைகள் நேற்று நடைபெறவிருந்த நிலையில்,  கெக்கிராவ இராணுவ முகாமிற்கு உத்தியோகபூர்வ பணியை மேற்கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்தில் உயிரிழந்துள்ளார்.

நேற்று காலை கெக்கிராவ பொத்தனேகம பிரதேச வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.