கண்டியில் முச்சக்கரவண்டியில் பயணிக்க வேண்டாம்; சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தல்!

0
245

கண்டியில் முச்சக்கரவண்டி சாரதிகள், சட்டவிரோத மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக, நாட்டிலுள்ள பல வெளிநாட்டு தூதரகங்கள் அறிவித்துள்ளதாக கண்டி மாநகர ஆணையாளர் நாயகம் இஷான் விஜேதிலக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று முன்தினம் (29-12-2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் முச்சக்கரவண்டியில் பயணிக்க வேண்டாம்! சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தல் | Do Not Travel By Three Wheeler In Kandy Tourists

இலங்கைக்கு வருகைத் தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை, கண்டி நகரிலுள்ள முச்சக்கரவண்டிகளில் பயணிக்க வேண்டாம் என தூதரகங்கள், தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.