வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்; இளைஞன் பலி!

0
301

மோட்டார் சைக்கிள் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 25 வயதுடைய மரதன் கடவல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.

இச் சம்பவம் அநுரதபுரம், எப்பாவல பிரதேசத்தில் கெக்கிராவ நோக்கி நோக்கி பயணித்து கொண்டிருந்த சமயத்தில் 14 கிலோ மீற்றர் கட்டை பகுதியில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (டிச.19) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் போது காயமடைந்த மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் எப்பாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் செலுத்திய நபரின் கவனயீனமே விபத்து ஏற்படக் காரணம் என்றும் விபத்து தொடர்பில் எப்பாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.