டக்ளஸ் And சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் OCAYA மின்சார ஸ்கூட்டர்கள் இலங்கையில் நேற்று (14) அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவின் OCAYA EV என்பது இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் EV 2-wheeler (electric vehicle) வாகன நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்தியாவில் சிறந்த மின்சார ஸ்கூட்டர்களை மலிவு விலையில் வழங்குகிறது.
இந்த மின்சார ஸ்கூட்டர் விலை, மைலேஜ் மற்றும் ரொப் ஸ்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் முழுமையான வரம்பைக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் நிறுவனம் இந்திய சந்தையிலும் இலங்கையிலும் Freedom, Class IQ,Avion IQ ஆகிய மூன்று மெதுவான மின்சார ஸ்கூட்டர்களை வழங்குகிறது.
மேலும் இந்நிகழ்வில் DSL குழும நிறுவனங்களின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான சரோஜ் பெரேரா, OKAYA Power Private Limited இன் இன்டர்நேஷனல் பிசினஸின் துணைத் தலைவர் அனில் குப்தா மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் நிகழ்வில் OKAYA EV ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தினர்.