நாமலின் வெளிநாட்டு பயணத்தடை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்கள்

0
503

இலங்கையில் கோட்டா கோ கம மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பிலான வழக்கின் சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவிற்கு (Namal Rajapaksa) விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக இடைநிறுத்தி கோட்டை நீதவான் திலின கமகே நேற்றைய தினம் (14-12-2022) உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கின் மற்றொரு சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு (Sanath Nishantha) விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக இடைநிறுத்துவதா, இல்லையா என்பது தொடர்பான உத்தரவு எதிர்வரும் 16 ஆம் திகதி பிறப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.