நாளை 10 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை!

0
438

கொழும்பில் உள்ள பல பகுதிகளுக்கு நாளையதினம் (10-12-2022) காலை 10 மணி முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தலை நீர்விநியோக நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

இதன்படி கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டே, கடுவெல மாநகர சபை, மஹரகம, பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளுக்கும் நாளை மறுதினம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை அறிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு! | For People Living In Colombo Water Cut

அத்துடன், கொலன்னாவ நகரசபை, கொட்டிகாவத்தை, முல்லேரியா, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளுக்கும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.