தந்தையை கொலை செய்த வாய் பேச முடியாத மகன்! பதுளையில் சம்பவம்..

0
406

தந்தையை மகன் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் ஒன்று பதுளை மாவட்டத்தில் பதிவாகி உள்ளது.

இச் சம்பவம் பதுளையில் நேற்று (26-11-2022) மாலை 6 மணி அளவில் இடம் பெற்றுள்ளது.

வெவெஸ்த்தை பெருந்தோட்ட பகுதியை சேர்ந்த 34 வயதுடைய வாய் பேச முடியாத மகன் தனது 60 வயது உடைய தந்தையை மரக்கட்டையால் தலையில் அடித்து கொலை செய்துள்ளார்.

இதனால் தாக்கப்பட்ட தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு மகனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்ற போது குறித்த இளைஞரின் தாயார் இரண்டு திருமணங்கள் முடித்தவர் என்பதுடன் முதல் கணவர் அவரை விட்டு சென்றுள்ளதாகவும் தாயாரின் இரண்டாவது கணவரையே மகன் தாக்கி கொலை செய்துள்ளதாகவும் ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.