மின்சார வேலி தாக்கி குடும்பஸ்தர் பலி!

0
421

டயகம் கிழக்கு பகுதியில், மின்சாரம் தாக்கி தோட்ட தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை 3 மணியளவிலேயே இச் சம்பவம் நடைபெற்றதுள்ளது.

டயகம கிழக்கு மூன்றாம் பிரிவை சேர்ந்த 45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான இராமகிருஸ்ணன் என்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தோட்ட தொழிலாளியின் உயிரைப் பறித்த மின்சாரம்! | Electricity Took The Life Of The Gardener

இந்நிலையில் குறித்த தொழிலாளி, தொழிற்சாலை உத்தியோகத்தரின் பணிப்பின் பேரில் அவரின் வசிப்பிட தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற போது தோட்டத்தில் விலங்குகளின் – பாதுகாப்புக்கு பொறுத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த தோட்டத்தொழிலாளியின் உடல் நுவரெலியா, மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


https://www.taatastransport.com/