பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து மகனுக்காக வெளியேறிய ஜிபி முத்துவை பிரபல இயக்குனர் பாராட்டி பதிவிட்டுள்ள கருத்து வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களில் முதல் போட்டியாளராக உள்ளே சென்ற ஜிபி முத்துக்கு ஏராளமான ரசிகர்களின் பட்டாளம் உள்ளது.
ஆனால் இவர் உள்ளே சென்ற இரண்டு வாரத்திற்குள் தனது மகனை தேடுவதாக கூறி அடம்பிடித்து குறித்த வீட்டைவிட்டு சில தினங்களுக்கு முன்பு வெளியேறியுள்ளார்.
இவரின் வெளியேற்றம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பயங்கர சவாலாக இருந்து வருகின்றது. பிக்பாஸ் மற்றும் கமல்ஹாசன் சமாதானப்படுத்தியும் ஜிபி முத்து தனது முடிவில் உறுதியாக இருந்து இறுதியில் வெளியில் வந்து தனது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகின்றார். மேலும் குடும்பத்துடன் கொண்டாடிய தீபாவளி கொண்டாட்ட காட்சியும் இணையத்தில் வைரலாகியது.
பிரபல இயக்குனர் பாராட்டு
இந்நிலையில், தேசிய விருது வென்ற இயக்குனரான சீனு இராமசாமி, ஜிபி முத்துவை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சீனு ராமசாமி தனது டுவிட்டரில், “வெற்றி பெற தகுதியான ஒரு போட்டியாளன், அதன் வருமானம், வெகுமானம் யாவற்றையும் பணிவோடு வேண்டாமென துறந்து விட்டு தன் மகனுக்காக புகழ் வாய்ந்த சபையில், உலகறிந்த நடிகர் கேட்டும் கேளாமல் பிக்பாஸிலிருந்து விடைபெற்ற தமிழ்மகன் ஜிபி முத்து தான் தீபாவளியின் வெற்றி நாயகன்” என பாராட்டி உள்ளார்.