பிக்பாஸ்-ஐ முடித்துவிட்டு இயக்குனரை ரச்சிதா திருமணம் செய்யவுள்ளாரா?… பரபரப்பை ஏற்படுத்திய பயில்வான்!

0
720

பிரபல தொலைக்காட்சி சேனல்களில் சீரியல்களில் நடித்து அனைவரையும் கவர்ந்திழுத்து வந்தார். சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சின்னத்திரை நடிகையாக இருந்து சரவணன் மீனாட்சி 2 உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வந்த ரச்சிதா, 7 ஆண்டுகளுக்கு முன் நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பிக்பாஸ் சீசன் 6

ஆனால் தற்போது கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இதன்பின் பிக்பாஸ் சீசன் 6ல் சென்று நன்றாக விளையாடி வருகிறார். நிகழ்ச்சியின் போது, தன் அம்மாவுக்கு காசுக்கொடுக்கக் கூடாது என்று தீனேஷ் கூறி வந்ததாகவும் குழந்தை பெற்றுக்கொடுக்கும் படி வற்புறுத்தியதாகவும் கூறியிருந்தார். இதுகுறித்து பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ஒரு குண்டைத்தூக்கி போட்டுள்ளார்.

பிக்பாஸ்-ஐ முடித்துவிட்டு இயக்குனர் திருமணம் செய்யவுள்ளாரா நடிகை ரச்சிதா..பரபரப்பை ஏற்படுத்திய பயில்வான்.. | Rachitha Getting Second Marriage After Biggboss

பயில்வான்

ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியது பற்றி கூறுகையில், ரச்சிதா சின்னத்திரை சரோஜா தேவி என்று கூறப்பட்டாலும் அவர் கழுத்தில் தாலி இல்லாமல் வெறும் கழுத்துடன் இருக்கிறார். தினேஷை பிரிந்து சமீபகாலமாக பிரிந்து வாழும் ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியது உண்மை என்றும், தொலைக்காட்சி இயக்குனர் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவதாகவும் விரைவில் அவரை திருமணம் செய்யவுள்ளதாகவும் பயில்வான் கூறியுள்ளார்.