நடிகர் கமல்ஹாசன் கடந்த 5 சீசன்களாக ஸ்டார் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் மற்றும் மக்களிடையே அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டைகள் மற்றும் கலவரங்கள் தான் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் விஷயங்கள்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில், நேற்று போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார் GP முத்து.
இதனிடையே நேற்று பிக்பாஸ் போட்டியில் கமல் தோன்றி போட்டியாளர்களிடம் உரையாடினார். அதைத் தொடர்ந்து இன்றும் கமல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்படுவது யார் என்ற விபரங்களை அவர் வெளியிட்டார். அதன்படி மெட்டி ஒலி சாந்தி இந்த வாரத்தில் எலிமேனேஷனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.
ஜி.பி.முத்து ஏற்கனவே வெளியேறிய நிலையில், தற்போது மெட்டி ஒளி சாந்தி வெளியேற்றப்பட்டு தற்போது பிக் பாஸ் வீட்டில் 19 போட்டியாளர்கள் உள்ளனர்.