ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். இதனிடையே தற்போது 3வது வாரத்தை ஒட்டி நடந்த நாமினேஷன் டாஸ்கில் அசீம் ஆயிஷாவையும், ஆயிஷா அசீமையும் நாமினேட் செய்தனர்.
முன்னதாக அசீம்க்கும் ஆயிஷாவுக்கும் நடந்த சண்டை பிக்பாஸ் வீட்டில் பெரிய சண்டையாக இருந்தது. அதில் அசீம் ஆயிஷாவை வாடி, போடி என்று சொன்னதும், பதிலுக்கு ஆயிஷா அசீமை நோக்கி செருப்பை கழட்டியதும் பரபரப்பானது. பின்னர் இருவரையும் ஹவுஸ் மேட்ஸ் சமாதானம் செய்தனர். ஆனாலும் வார இறுதியில் அசீம் தன் தவறுகளுக்கும், ஆயிஷா தன் தவறுக்கும் மன்னிப்பு கேட்டனர். இதற்கும் முன்னதாக பிக்பாஸ் வீட்டுக்குள்ளேயே இருவருமே ஒருவருக்கொருவர் மன்னிப்பும் கேட்டிருந்தனர்.
எனினும் கமல்ஹாசன், அசீம் செய்த தவறு குறித்து அவருக்கு அறிவுரை கூறினார். மேலும் நிகழ்ச்சியின் தரத்தை குறைக்காமல் அனைவரும் அனைவரையும் மரியாதையுடன் நடத்துங்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில் ஆயிஷா பிக் பாஸ் வீட்டில் மீண்டும் மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார். அவரை உடனே மருத்துவ சிகிச்சை கொடுப்பதற்காக அசீம் குண்டுகட்டாக தூக்கி சென்றார். இந்த விவகாரம் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.