பிக்பாஸ் வீட்டைவிட்டு கண்ணீருடன்  வெளியேறும் ஜி.பி. முத்து; பரபரப்பு காணொளி!

0
474

இரண்டாவது வாரத்தில் விறுவிறுப்பாக  பிக்பாஸ் நிகழ்ச்சி சென்றுகொண்டிருக்கும் நிலையில்  , ஜி.பி. முத்து  கண்ணீருடன்  வீட்டைவிட்டு வெளியேறும் காணொளி வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சில நாட்களுக்கு முன், ஜி.பி. முத்து தனக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்க முடியவில்லை, தனது குடும்பத்தை பார்க்க வேண்டும் என்றும், வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டும் என்றும் கூறினார்.

இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இதன்பின் ஜி.பி. முத்துவை சமாதானம் செய்து வீட்டிற்குள் இருக்க வைத்தார் பிக் பாஸ். ஆனால், தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ள ஜி.பி. முத்து பிக் பாஸ் இடம் கூறிவிட்டு கண்ணீருடன் வெளியேறியுள்ளார்.

இது உங்களுடைய முடிவு என்றும், வீட்டில் உள்ள அனைவரிடமும் சொல்லிவிட்டு வெளியே வாருங்கள் என்றும் பிக் பாஸ் கூறியுள்ளார்.

ரசிகர்கள் வெளியிட்டுள்ள காணொளி

ஆனால், இவை அனைத்தும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டைவிட்டு கண்ணீருடன் வெளியேறிய ஜி.பி. முத்து; அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி ! | Left The Bigg Boss House In Tears Gp Muthu

இந்த வீடியோவை தத்ரூபமாக உண்மையாகவே ஜி.பி. முத்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்பது போல் எடிட் செய்து ரசிகர்கள் வெளியிட்டுள்ள நிலையில் குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.