குடும்ப வன்முறையை காரணமாக இரண்டு சிறார்கள் பரிதாப உயிரிழப்பு!

0
384

கனடாவில் குடும்ப வன்முறை சம்பவம் ஒன்றே காரணமாக இரண்டு சிறார்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் 11 வயதான சிறுவனும் 13 வயதான சிறுமியும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

கனடாவின் மொன்றியலின் வடக்கு தீவு பகுதியான லாவல் பகுதியில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து அறிந்து கொண்ட போலீசார் அந்த இடத்திற்கு விரைந்த போது இரண்டு சிறார்கள் ஆபத்தான நிலையில் இருந்ததை கண்டு அவர்களை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

எவ்வாறெனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறார்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் படுகாயம் அடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 46 வயதான நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நபருக்கும் உயிரிழந்த சிறார்களுக்கும் இடையிலான உறவு பற்றிய விவரங்களை போலீசார் இதுவரை வெளியிடவில்லை.

குறித்த நபரின் உடல்நிலை தேறிய பின்னர் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் போலீசாரம் நகர மேயரும் தங்களது இரங்கல்களை வெளியிட்டுள்ளனர்.

கனடாவில் குடும்ப வன்முறையினால் நேர்ந்த பயங்கரம்? இரண்டு சிறார்கள் பலி | 2 Children Dead Man In Custody After

சிறார்களின் தாய் அதிர்ச்சி காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.