யாழில் போதைப்பொருட்களுடன் ஐந்து இளைஞர்கள் அதிரடி கைது!

0
544

யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அருகில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

800 போதை மாத்திரைகள் மற்றும் 230 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ். பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யாழ். வைத்தியசாலையின் பின்புறத்தில் அமைந்துள்ள வீதியில் யாழ். குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே போதைப்பொருட்களுடன் இந்த இளைஞர்கள் ஐவரும் கைதாகியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் 19 முதல் 26 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் சுன்னாகம், கொக்குவில் மற்றும் வட்டுக்கோட்டை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்கள்.

யாழில் ஐந்து இளைஞர்கள் அதிரடி கைது! | Five Youths Arrested In Action

சந்தேக நபர்கள் யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்கள். சம்பவம் தொடர்பில் யாழ். குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.