தமிழ் தேசிய அரசியலில் பரபரப்பு: யாழில் ஓரணியில் இணைந்த முக்கிய புள்ளிகள்!(படங்கள் இணைப்பு)

0
411

முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரிய தலைமையில் யாழில் இன்றையதினம் விசேட கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் தற்போது இடம்பெற்றுவரும் கலந்துரையாடலில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல முக்கிய அரசியல் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.

குறிப்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் ஒரே மேசையில் அமர்ந்து கொண்டனர்.

இந்நிலையில் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிரெதிர் அரசியல் தரப்பினர் ஒன்றாக இணைந்திருந்ததை போல தமிழ் மக்களின் அரசியல் தீர்விற்கும் ஒன்றாக பயணிக்க வேண்டும் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.