கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையை மறுசீரமைக்க ஜப்பான், வெளிநாட்டுக் கடனில் சுமார் 30 பில்லியன் டொலர்களை உதவவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்றையதினம் (23-09-2022) டோக்கியோவுக்கான இலங்கை தூதர் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் டொலர் பிணை எடுப்பை பெறுவதற்கு கடனளிப்பவர்களுடன் உடன்பாட்டை எட்டுவது முக்கியமானது.
இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடனான இறுதி ஒப்பந்தத்தை இலங்கை அடையும் வகையில் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை செயல்முறைக்கு ஜப்பான் ஆதரவாக இருக்கும் என்று தூதுவர் ஹிடேகி மிசுகோஷி ((Hideaki Mizukoshi)) கூறியுள்ளார்.