காலாவதியான பைஸர்; வடக்கு மருத்துவர்களை மிரட்டிய சிங்கள அதிகாரி!

0
523

மாணவர்கள் உயிரிழப்பார்கள் என கூறி பெற்றோரை அச்சுறுத்துவதன் மூலம பைஸர் தடுப்பூசிகளை மாணவர்களுக்கு ஏற்றுங்கள் என மருத்துவர்களுடனான கலந்துரையாடலில் சிங்கள அதிகாரி ஒருவர் வடக்கு மருத்துவர்களை மிரட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்­கை­யி­லேயே வடக்கு மாகா­ணத்­தில்­தான் 4 ஆவது டோஸ் ஏற்­றி­ய­வர்­கள் குறை­வாக உள்­ளார்­கள் என்­றும் அந்­தச் சிங்­கள அதி­காரி தெரி­வித்­துள்­ளார்.

அத்துடன் நாடு முழு­வ­தும் 4ஆவது டோஸை காலா­வ­தி­யான பைஸரை 0.8 சத­வீ­தத்­தி­னரே இது­வரை ஏற்­றி­யுள்­ள­னர்.

காலாவதியான தடுப்பூசி; வடக்கு மருத்துவர்களை மிரட்டிய சிங்கள அதிகாரி! | Sinhalese Officer Threatened Northern Doctors

எனினும் இந்­தத் தக­வலை மறைத்து அந்த அதி­காரி  மேற்­கண்­ட­வாறு  கூறி­யுள்­ளார்.

 அறிவு­றுத்­தல்­களோ, சுற்­ற­றிக்­கை­களோ இல்லை 

இதே­வேளை தடுப்­பூசி தொடர்­பான விட­யங்­க­ளில் இது­வரை கால­மும்  வடமாகாண பிர­தம செய­லர் சமன் பந்­து­ல­சேன எந்­த­வொரு கடி­தங்­களோ, அறிவு­றுத்­தல்­களோ, சுற்­ற­றிக்­கை­களோ அனுப்­பவில்லை.

காலாவதியான தடுப்பூசி; வடக்கு மருத்துவர்களை மிரட்டிய சிங்கள அதிகாரி! | Sinhalese Officer Threatened Northern Doctors

இந்த நிலையில் , காலா­வ­தி­யான தடுப்­பூசி ஏற்றப்படாமல் இருப்­பது தொடர்­பில் வடக்கு மாகாண சுகா­தா­ரத் திணைக்­க­ளத்­துக்கு கடி­தம் அனுப்­பி­யுள்­ளார்.

அதேசமயம் காலா­வ­தி­யான தடுப்­பூ­சியை ஏற்ற முடி­யும் என்ற சுகா­தார அமைச்­சின் சுற்றறிக்கையை­யும் இணைத்து அவர் அந்­தக் கடி­தத்தை அனுப்­பி­யுள்­ளதாகவும் கூறப்படுகின்றது.