மாணவர்கள் உயிரிழப்பார்கள் என கூறி பெற்றோரை அச்சுறுத்துவதன் மூலம பைஸர் தடுப்பூசிகளை மாணவர்களுக்கு ஏற்றுங்கள் என மருத்துவர்களுடனான கலந்துரையாடலில் சிங்கள அதிகாரி ஒருவர் வடக்கு மருத்துவர்களை மிரட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையிலேயே வடக்கு மாகாணத்தில்தான் 4 ஆவது டோஸ் ஏற்றியவர்கள் குறைவாக உள்ளார்கள் என்றும் அந்தச் சிங்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடு முழுவதும் 4ஆவது டோஸை காலாவதியான பைஸரை 0.8 சதவீதத்தினரே இதுவரை ஏற்றியுள்ளனர்.
எனினும் இந்தத் தகவலை மறைத்து அந்த அதிகாரி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அறிவுறுத்தல்களோ, சுற்றறிக்கைகளோ இல்லை
இதேவேளை தடுப்பூசி தொடர்பான விடயங்களில் இதுவரை காலமும் வடமாகாண பிரதம செயலர் சமன் பந்துலசேன எந்தவொரு கடிதங்களோ, அறிவுறுத்தல்களோ, சுற்றறிக்கைகளோ அனுப்பவில்லை.
இந்த நிலையில் , காலாவதியான தடுப்பூசி ஏற்றப்படாமல் இருப்பது தொடர்பில் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதேசமயம் காலாவதியான தடுப்பூசியை ஏற்ற முடியும் என்ற சுகாதார அமைச்சின் சுற்றறிக்கையையும் இணைத்து அவர் அந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.