யாழில் தேடுவாரற்று தெருவில் வீசப்பட்ட பரீட்சை வினாத்தாள்கள்!

0
565

வடமாகாண கல்வித் திணைக்களத்தின் அனுசரணையில் தொண்டைமானாறு வெளிக்கள ஆய்வு நிலையம் நடத்தும் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் சண்டிலிப்பாய் கோட்டக்கல்வி அலுவலகத்தின் முன்வாசலில் போடப்பட்டுக் கிடந்துள்ளமை தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

பரீட்சை வினாத்தாள்கள் வீதி ஓரத்தில் போடப்பட்டுக் கிடக்கும் காட்சிககள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படு வருகின்றது.

யாழில் தேடுவாரற்று  தெருவில் வீசப்பட்ட  பரீட்சை வினாத்தாள்கள் | Examination Question Papers Thrown Jaffna

அத்துடன் “இது தான் வடமாகாண கல்வி திணைக்களத்தின் அனுசரணையுடன் வினாத்தாள் கையளிக்கும் நடைமுறையா” என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக பதிலளித்த வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் இது தொடர்பில் தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெறவில்லை எனவும் இந்த விடயத்தினை வலயக் கல்வி பணிப்பாளருக்கு தெரியப்படுத்துமாறும்” கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் தேடுவாரற்று  தெருவில் வீசப்பட்ட  பரீட்சை வினாத்தாள்கள் | Examination Question Papers Thrown Jaffna

அதேசமயம் “வினாத்தாள்களை கொண்டு சென்றவர் பரீட்சை வினாத்தாள்கள் அதிபரிடம் தான் கையளித்ததாகவும் இவ்வாறு வீசப்படவில்லை” எனவும் தனக்கு தெரியவந்துள்ளதாகவும் வலயக் கல்வி பணிப்பாளர் கூறியதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் இது சம்பந்தமாக ஆராய்வதாக வலயக் கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை யாழ்.மாவட்டத்தில் தேடுவாரற்று இவ்வாறு வினாத்தாள்கள் வீசப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.