யாழில் போதையில் தங்கையை வன்புனர்வுக்குட்படுத்திய அண்ணன்; சகோதரி தற்கொலை!

0
894

யாழில் போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் வன்புணர்வுக்கு உள்படுத்தியதனால் மனவிரக்தியில் சகோதரி உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் சுன்னாகம் பொலிஸ் பிரிவில் நேற்று முன் தினம் (10-09-2022) இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் 20 வயதுடைய இளம்பெண்ணே உயிரை மாய்த்துள்ளார்.

யாழில் சகோதரரின் கொடூர செயலால் விபரீத முடிவை எடுத்த இளம் பெண்! | Jaffna Brother Drugs Use Abuse Sister Suicide

அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ் போதனா மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் தனது சகோதரியை வன்புணர்வுக்கு உள்படுத்தியுள்ளார்.

யாழில் சகோதரரின் கொடூர செயலால் விபரீத முடிவை எடுத்த இளம் பெண்! | Jaffna Brother Drugs Use Abuse Sister Suicide

அதனால் விரக்தியடைந்த சகோதரி குரல் பதிவில் நடந்தவற்றை பதிவு செய்து நண்பிக்கு அனுப்பிவிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார்.

சகோதரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் எடுக்கப்பட்டுள்ளது. வாக்குமூலத்தில் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

யாழில் சகோதரரின் கொடூர செயலால் விபரீத முடிவை எடுத்த இளம் பெண்! | Jaffna Brother Drugs Use Abuse Sister Suicide

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, யாழில் ஹெரோயின் உள்ளிட்ட உயிர்க்கொல்லி போதைப்பொருள் பாவனை இளவயதினர் இடையே அதிகரித்துள்ளதனால் பல்வேறு சமூகப் பிறழ்வு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதுடன் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.