மீண்டும் ஒன்றிணையவுள்ள இலங்கை மக்கள்

0
391

கொழும்பில் எதிர்வரும் 30ஆம் திகதி போராட்டத்தை நடத்த சிலர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இடைக்கால வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

அத்துடன், நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இடைக்கால வரவு செலவுத் திட்டத்தினை முன்வைத்து உரையாற்றவுள்ளார்.

இந் நிலையிலேயே அன்றைய தினம் கொழும்பிற்கு வந்து போராட்டம் நடத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் ஏற்கெனவே தீர்மானித்துள்ளதாக புலனாய்வு பிரிவு அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளதாக தெரிய வருகிறது.