நாட்டின் பல இடங்களில் கடந்த மே மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் மேலும் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவலைப் பொலிஸ் ஊடகப் பிரிவு நேற்றைய தினம் (22-08-2022) அறிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட 31 பேரில் அறுவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் ஏனையோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, ‘மே 09’ வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 3 ஆயிரத்து 553 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.