வெள்ளவத்தை சிறுவர் காப்பகத்தில் 15 வயது சிறுமி மாயம்!

0
453

கொழும்பு வெள்ளவத்தை டபிள்யு.ஏ.டி. சில்வா மாவத்தையிலுள்ள சிறுவர் காப்பகத்திலிருந்த சிறுமியொருவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறுதி நேற்று (2) அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. தப்பியோடிய சிறுமி கடந்த 3 நாள்களுக்கு முன்னரே ரன்முத்துகல சிறுவர் காப்பகத்திலிருந்து வெள்ளவத்தை சிறுவர் காப்பகத்துக்கு அழைத்து வரப்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர் காப்பகத்திலிருந்து மாயமான  15 வயது சிறுமி ! | A15 Year Old Girl Disappeared From The Nursery

மேலும் தப்பியோடிய 15 வயதான குறித்த சிறுமி தியகடுவ, மஹகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் கூறியுள்ளதுடன் மாயமான சிறுமியைத் தேடும் பணியை வெள்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.