பாடசாலை மாணவர் இருவர் பரிதாப உயிரிழப்பு

0
312

நெல்லிகல சர்வதேச பௌத்த மத்திய நிலையத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள குளத்தில், நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (20) பகல் குறித்த மாணவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் நீராடச் சென்று, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இதனை அவதானித்த பிரதேசவாசி ஒருவர், பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, அவர்களின் சடலம் மீட்கப்பட்டு பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் உயிரிழந்தவர்கள் யாலதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதான சுப்ரமணியம் விஸ்வா, மொஹமட் அபராத் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.