மட்டக்களப்பில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த இளைஞர் மர்ம மரணம்

0
746

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடாவில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை 5.30 மணியளவில் கூலிவேலைக்குச் சென்று வீடு திரும்பிய இளைஞர் தாயிடம் குளிர்பானம் வாங்கி அருந்தி விட்டு தனது வீட்டுத் தோட்டத்திலுள்ள பயிர்களுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு நின்றுள்ளார்.

Gallery

அதன்பின்னர் தாயார் கடைக்கு சென்று திரும்பி வந்து பார்க்கையில் நீர் ஊற்றிய இடத்திலேயே மூச்சின்றி மகன் இறந்து காணப்படதாக மரணமானவரின் தாய் தெரிவித்தார்.

சம்பவத்தில் 31வயதுடைய ஆனந்தன் ஜெயராஜ் என்பவரே உயிரிழந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.