கொழும்பு பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி

0
863

கொழும்பு புறக்கோட்டை, பெஸ்டியன் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சத்திரசிகிச்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 மேலும் இந்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளௌ முன்னெடுத்துள்ளனர்