தேசபந்து தென்னக்கோனை கைது செய்யக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

0
258

மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

இந்த நிலையில் அவரை கைது செய்யுமாறு கோரி நீதிமன்ற வளாக பகுதியில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டாகோகம மற்றும் அலரிமாளிகை முன்பாக அமைக்கப்பட்டிருந்த மைனாகோகம போராட்டக்காரர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

Gallery

Gallery

Gallery

Gallery