சீனாவில் ஏற்பட்ட பெரும் துயரம்

0
502

மத்திய சீனா பகுதியில் உள்ள சாங்சா நகரில் குடியிருப்புகளுடன் கூடிய 6 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் 53 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சீட்டு கட்டு போல சரிந்து விழுந்த இந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி கொண்ட நிலையில், போலிஸார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இரவு பகலாக இந்த மீட்பு பணி இடம்பெற்றதுடன் ராட்சத இயந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனினும் இந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி 53 பேர் பரிதாபமாக உஇரிழந்த அதேவேளை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு 10 பேர் காங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், இந்த கட்டிட விபத்து தொடர்பாக 9 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.