ரயில்வே பணியில் ஈடுபடும் மனித வகையிலான ரோபோ!

0
434

ஜப்பானில் ரயில்வே பணிகளில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு உள்ள மனித வகையிலான ரோபோ ஒன்று ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது.

ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் இந்த ரோபோ, 40 கிலோ எடையுள்ள பொருட்களை 10 மீட்டர் உயரம் வரை தூக்கும் திறன் கொண்டதாக உள்ளது.

ரயில் இயக்கத்திற்காக அமைக்கப்பட்டு உள்ள மின்கம்பிகளில் ஏற்படும் பழுதுகளை இந்த ரோபோ சுலபமாக சரிசெய்வதால், மனிதர்களின் ஆபத்தான பணிக்கு இந்த ரோபோ உதவிகரமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களின் உழைப்பை மூன்றில் ஒரு பங்காக இந்த ரோபோ குறைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது சோதனை முறையில் மட்டும் மனித ரோபோ பயன்படுத்தப்படுவதாகவும், 2024 ஆம் ஆண்டு முழு வீச்சில் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.