புகையிரத தொழிற்சங்கங்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்!

0
319

பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புகையிரத தொழிற்சங்கங்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது ஆட்சிக்கு எதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை பொதுமக்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை நடத்தவுள்ளது.

புதன்கிழமை (27) நள்ளிரவு முதல் வியாழன் (28) நள்ளிரவு வரை 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

முக்கிய புகையிரத தொழிற்சங்கங்கள் உட்பட கிட்டத்தட்ட 30 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.