பிரான்ஸில் பொலிஸ் அதிகாரிகள் மீது மோத வந்த கார்; இருவர் பலி!

0
636

பிரான்ஸில், பொலிஸ் அதிகாரிகள் மீது மோதுவது போல் வந்த காரை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் உயிரிழந்தனர்.

தலைநகர் பாரிஸில் உள்ள பழமை வாய்ந்த போனாஃப் பாலத்தின் மீது, வோல்க்ஸ்வேகன் போலோ கார் ஒன்று ராங் சைட்டில் பொலிசாரை நோக்கி வேகமாக வந்துள்ளது.

இதன்போது தற்காப்பிற்காக பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த இருவரும் ஸ்தலத்தில் உயிரிழந்தனர்.

அதேசமயம் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தனது தொகுதியில் வெற்றி பெற்றதை ஆதரவாளர்களுடன் உற்சாகமாக கொண்டாடி வந்த நிலையில், இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை  முன்னெடுத்துள்ளனர்.