சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து உதைபடும் தோனி, ஜடேஜா எடுத்த முடிவு

0
674

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தீபக் சஹாருக்கு மாற்று வீரர் குறித்து அணி நிர்வாகம் முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிஎஸ்கேவுக்கு இந்தாண்டு ஐபிஎல் தொடரில் அடிமேல் அடி விழுந்து வருகிறது. விளையாடிய ஆறு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் தோற்றுள்ளது அந்த அணி.

சிஎஸ்கே பந்துவீச்சில் தொடர்ந்து சொதப்பி வருவதுதான் பெரும் பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம், தீபக் சஹார் இல்லாததுதான். இவர் காயம் காரணமாக பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமியில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

காயம் விரைவாக குணமடைந்து வருவதால், ஏப்ரல் இறுதியில் அணியில் இணைந்துவிடுவார் என முன்பு கூறப்பட்டது. இந்நிலையில், அவர் தொடரிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார்.

இந்த விடயம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன் கூறுகையில், மாற்று வீரர்களை தேர்வு செய்து அணி குழுவிடம் தெரிவித்தோம். அவர்கள் இதுவரை எவ்வித பதிலும் தரவில்லை. மாற்று வீரர் வேண்டாம் என்ற முடிவில் அவர்கள் இருப்பதாகவே தோன்றுகிறது என கூறியுள்ளார்.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து தோற்கும் நிலையிலும் சஹாருக்கு மாற்று வீரரை எடுக்க போவதில்லை என்ற நிலைபாட்டில் அணி நிர்வாகம் உள்ளது ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.