கொழும்பில் மக்கள் முன்னிலையில் தோன்றி அச்சுறுத்திய பிரபலம்

0
477

கொழும்பு – காலி முகத்திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த போது திடீரென நபர் ஒருவர் ஜனாதிபதி செயலகத்திற்குள் இருந்து வெளியே வந்துள்ளார்.

ஹிந்தி படத்தின் நடிகர் போன்று போராட்டக்காரர்கள் முன் வந்து வித்தியாசமான சைகளை காண்பித்துள்ளார்.

யார் இந்த நடிகர் என மக்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பார்த்த போது அவர் நாட்டை விட்டு தப்பியோடியதாக கூறப்படும் நிஸ்ஸங்க சேனாதிபதி என தெரியவந்துள்ளது. 

நாட்டில் பாரிய பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவரை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர பிரதான செய்திகளுடன் இனைந்திருங்கள்.