அரச சேவை ஊழியர்களுக்கான இம்மாத சம்பளத்தை வழங்குவதில் எவ்வித தடையும் இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சு கூறியுள்ளது.
அதேசமயம் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் , அரசாங்கத்தை விலகுமாறு நாடாளாவிய ரீதியில் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.