கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை! – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

0
266

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் பொதுப் போராட்டங்கள் சிறு போராட்டங்களே என நெடுஞ்சாலைகள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

இலங்கையில் உள்ள 6.9 மில்லியன் மக்களின் ஆதரவு இன்னும் இருப்பதால், கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை எனவும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் கோட்டாபய தனது இராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை எனவும், மக்கள் ஆணையை கோட்டாபய இன்னும் வைத்திருப்பதாக தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.கோட்டாபயவுக்கு இன்னும் மக்களின் ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்க தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.