இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் நாளை (ஏப்ரல் 03) ரமழான் நோன்பை ஆரம்பிக்க உள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது
ரமழானின் ஆரம்பத்தை அறிவிக்கும் புனித பிறை இன்று (ஏப்ரல் 02) தென்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.
இதனையடுத்தே நாளை முதல் நோன்பு ஆரம்பமாகிறது.
இஸ்லாமிய நாட்காட்டியில்; ஒன்பதாவது மாதமான ரமலான் நோன்பு இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றாக கருதப்படுகிறது.