தாமதமின்றி அமைதியை எதிர்பார்க்கின்றோம் – ஜெலன்ஸ்கி உருக்கம்!

0
313

உண்மையில் தாமதமின்றி நாங்கள் அமைதியை எதிர்பார்க்கிறோம் என நாட்டு மக்களிடம் அதிபர் ஜெலன்ஸ்கி தொலைக்காட்சி மூலம் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த வாரம் துருக்கியில் நடைபெறும் உக்ரைனிய-ரஷ்ய பேச்சுவார்த்தைகளில் உக்ரைனின் முன்னுரிமைகள், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு என்பன பற்றிப் பேசப்படும்.

துருக்கியில் நேருக்கு நேர் சந்திப்பதற்கான வாய்ப்பும், தேவையும் உள்ளது. இது மோசமானதல்ல, முடிவைப் பார்ப்போம்.

ரஷ்யா முற்றுகையிட்ட மரியுபோல் நகரங்களின் மோசமான நிலைமையை நினைவூட்ட மற்ற நாடுகளின் நாடாளுமன்றங்களில் நான் தொடர்ந்து முறையிடுவேன்.

உக்ரைனின் ஆயுதப் படையினர் ஆக்கிரமிப்பாளர்களைத் தடுத்து நிறுத்தி வருவதோடு, சில பகுதிகளில் முன்னேறி வருகின்றனர் என்பதால் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.