தம்மிடமிருந்து பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்காக மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனை இலங்கைக்கு வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சீனாவிடம் இருந்து பெறப்பட்ட கடன்களை மறுசீரமைக்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளதுடன், இது தொடர்பில் இலங்கைக்கு மற்றுமொரு கடனை வழங்க சீனா தீர்மானித்துள்ளது.இந்த 1 பில்லியன் டொலர் முழு சீனக் கடனையும் திருப்பிச் செலுத்த பயன்படுத்த வேண்டும் என்று தெரிய வந்துள்ளது.