லாரன்ட் தற்கொலை – பிரான்சில் பரபரப்பு

0
465

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 35 வயதுடைய லாரன்ட் என்பவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கலவரத்திற்கு 520,000 டொலர் தொகையை வழங்கியுள்ளார். அவர் தனது சொந்த குடியிருப்பை பயன்படுத்தாமல் ஹோட்டலில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். அவர் கடந்த 8 ஆண்டுகளாக நரம்பு சம்பந்தமான வலிகளால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் உயிர் இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன் சுமார் 28.15 பிட்காயின் வடிவிலான தொகையை நிக் பியூன்ட்ஸ் என்பவரது கணக்கில் செலுத்தியுள்ளார்.

போலீசாரின் விசாரணையில் அவர் அளவுக்கு அதிகமாக வீரியம் மிகுந்த போதை பொருள் உட்கொண்டதால் தான் உயிரிழந்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.